ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல எதிர்ப்புகளுக்கிடையே தெலுங்கில் அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படம் 'கீதாஞ்சலி'. ராஜ் கிரண் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் அஞ்சலியைச் சுற்றித்தான் கதையே நகர்கிறதாம். ஹர்ஷவர்தன் ரானே, பிரம்மானந்தம் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமானவராக அஞ்சலி தான் இருப்பார் என அவருக்கிருக்கும் பிரச்னைகளுக்கிடையிலும் அவரையே நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். அஞ்சலி நடிக்காமல் போயிருந்தால் இந்தப் படம் அப்படியே நின்றிருக்கும் என அஞ்சலி புகழ் பாடுகிறார் படத்தின் எழுத்தாளரான கோனா வெங்கட்.
ஒரு த்ரில்லர் படமான இந்தப் படம் அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமையும் என்கிறார் கோனா வெங்கட். அனுஷ்காவிற்கு எப்படி 'அருந்ததி' அமைந்ததோ, ஜோதிகாவுக்கு எப்படி 'சந்திரமுகி' அமைந்ததோ, அது போல அஞ்லிக்கு இந்தப் படம் அமையும் என்கிறார். முதல் முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கிறார் அஞ்சலி. இந்தப் படம் மூலம் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றும் நம்புகிறார். நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம் பெற உள்ள ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றமாக நடனம் ஆடுமாறு நடிகை சமந்தாவிடம் கேட்டுள்ளார்கள். ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே, அந்த குறிப்பிட்ட பாடலில் நடனமாட ஸ்ருதிஹாசன் சம்மதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அந்த பாடலில் அவருடன் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தமும் நடிக்க உள்ளாராம். ஏற்கெனவே இவர்கள் இருவரும் 'பலுப்பு' படத்தில் இணைந்து நடித்து அசத்தியிருந்தார்கள். அஞ்சலி நடிக்கும் படத்தில் ஸ்ருதி நடனமாடவிருப்பது ஆச்சரிய அலைகளை உருவாக்கியிருக்கிறது.