மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
தென்னிந்திய நட்சத்திரங்களாக இருந்தாலும் சிலர் மும்பையில் செட்டிலாவது தான் தற்போதைய பேஷனாக உள்ளது. ஏற்கெனவே ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் மும்பையில் செட்டிலாகி உள்ளனர். ராஷ்மிகாக மந்தனா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை மும்பையில் வாங்கினார். தற்போது 'பீஸ்ட்' படக் கதாநாயகி மும்பையில் வீடு வாங்கியுள்ளார்.
அந்த வீட்டில் நடைபெறும் வேலைகளை அவர் மேற்பார்வையிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். “எனது கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பூஜா குடும்பத்தினர் மும்பையில் செட்டிலாகி உள்ளனர். பூஜாவின் அம்மா தான் தற்போது வீட்டின் கட்டிட வேலைகளை மேற்பார்வை செய்து வருகிறாராம்.
பூஜா ஹெக்டே தமிழில் 'பீஸ்ட்' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடிக்கப் போகிறார். தெலுங்கில் நடித்துள்ள 'ராதே ஷ்யாம், ஆச்சார்யா' விரைவில் வெளிவர உள்ளன.