ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தொண்ணூறுகளில் மலையாள சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் இறங்கியதால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்தநிலையில் மீண்டும் நடிப்புக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. ஆனால் தனது சக நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போல இளமையான கதாபாத்திரங்களில் நடிக்கமால், வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
அந்தவகையில் கடந்த வருடம் வெளியான 'வரனே ஆவிஷ்யமுண்டு' என்கிற படத்தில், ஒரு இளம்பெண்ணுக்கு தாயான ஷோபனாவை காதலிக்கும் வயதான பிரம்மச்சாரி வேடத்தில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் காவல் மற்றும் பாப்பன் ஆகிய படங்களில் அவர் ஹீரோவாக நடித்தாலும், அவை ஆக்சன் படங்களாக உருவாக்கி வந்தாலும் கபாலி ரஜினி போல நரைத்த தாடி மீசையுடன் சற்றே வயதான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான அந்தப்படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.