ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அருவி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் படவேட்டு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதையடுத்து பிரித்விராஜ் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் 'கோல்ட் கேஸ்' (cold case) என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார் அதிதி பாலன். பிரித்விராஜ் இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அதிதி பாலன் இதில் துணிச்சலான பத்திரிகையாளராக நடித்துள்ளார். இந்தப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்தப்படம் பற்றி அதிதி பாலன் கூறும்போது, “நானும், என் அம்மாவும் சேர்ந்துதான் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டையே படித்தோம். இதில் எனக்கு தனித்தன்மை வாய்ந்த துணிச்சலான பத்திரிகையாளர் கதாபாத்திரம். ஹீரோ பிரித்விராஜூக்கும், எனக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும் நாங்கள் இருவரும் அதிக காட்சிகளில் சேர்ந்து நடிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நிவின்பாலியுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை வைத்து பார்க்கும்போது, அவரை விட பிரித்விராஜ் கொஞ்சம் சீரியஸான மனிதர் தான்.. ஆனாலும் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாம் நாளே அவருடன் எனக்கு நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டது” என கூறியுள்ளார் அதிதி பாலன்.