ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள இசை உலகில் பிரபலமானர் பாலா பாஸ்கர். அடிப்படையில் வயலின் இசை கலைஞரான இவர், மாங்கல்யு பல்லாக்கு என்ற படத்துக்கு இசை அமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் பெரிய வெற்றி பெற்றதும் பல படங்களின் வாய்ப்பு வந்தது. தற்போது 2 படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
பாலா பஸ்கர், தனது மனைவி லட்சுமி, 2 வயது மகள் தேஜஸ்வினியுடன் திருவனந்தபுரத்திலிருந்து திருச்சூருக்கு சாமி கும்பிடச் சென்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திருவனந்தபுரம் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அர்ஜுன் என்பவர் ஓட்டி வந்தார். கார் பள்ளிபுரம் என்ற இடத்தின் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்ற மரத்தின் மீது திடீரென மோதியது. இதில் பாலா பாஸ்கரும், அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பாலா பாஸ்கரும், அவரது மனைவி லட்சுமியும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளனர். டிரைவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. பாலா பாஸ்கரும், அவரது மனைவியும், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மகள் தேஜஸ்வினி இறந்தது அவர்களுக்கு தெரியாது. திருமணமாகி 16 வருடங்களுக்கு பிறகு தான் தேஜஸ்வினி பிறந்தாள். தவமிருந்த பெற்ற மகளை இழந்து விட்டு உயிருக்கு போராடும் பாலா பாஸ்கர் தம்பதிகள் குணமடைய கேரள இசை கலைஞர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.