ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் மோகன்லால்-பிரியதர்ஷன் என்கிற எவர்கிரீன் கூட்டணி தற்போது மரைக்கார் ; அரபிக்கடலின்ட் சிம்ஹம் என்கிற படத்தில் இணைந்துள்ளது. மிக பிரமாண்டமாக சுமார் நூறுகோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப்படத்தில் மாற்றமொழிகளில் இருந்து முக்கிய நட்சத்திரங்களை தேர்வு செய்து வருகிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.
அந்தவகையில் நடிகர் பிரபு, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்தநிலையில் நடிகர் அர்ஜுனும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அர்ஜுன் நடிக்க வந்து இந்த 37 வருடங்களில் கடந்த 2010ல் வந்தே மாதரம் என்கிற ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவான அந்தப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்த அர்ஜுன், தற்போது முதன்முறையாக மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. நவ-1ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது..