14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மலையாள நடிகர் கேப்டன் ராஜூ நேற்று காலமானார். கடந்த 37 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்துவந்த அவர், தான் நடித்த படங்களில் எல்லாம் பெரும்பாலும் ஹைடெக்கான, ஸ்டைலிஸான வில்லனாகவே நடித்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடிக்காமல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கலந்த வேடங்களில் நடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
கேப்டன் ராஜூ தனது ரூட்டை மாற்றியதற்கு காரணம் அவரது தாயார் தான். ராஜூ வில்லனாக நடிப்பதில் அவருக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லை. அதை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பாராம். அதனால் அவரது அம்மா மறைந்தபின் அவர் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து இனி வில்லன் வேடங்களை ஏற்பதில்லை என முடிவு செய்து நடிப்பில் புது ரூட்டுக்கு மாறினாராம் கேப்டன் ராஜூ.