ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் வெளியான அபியும் அனுவும் படத்தில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது கேரளாவில் இருக்கும் இவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது வீட்டையே நிவாரண முகாமாக மாற்றியமைத்து உதவி செய்துள்ளார்.
கேரளாவில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் இவரது வீடு உள்ளது. இந்தப்பகுதியில் மழையின் தாக்கம் அதிகம் இருந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் மிகவும் குறைவு என கூறியுள்ள டொவினோ தாமஸ், வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்கள் தனது வீட்டில் தாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
நிலைமை சீராகும் வரை அவர்களுக்கான அடிப்படை தேவைகளை தானே செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த உதவியை பாதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரேனும் தயவுசெய்து தவறாக பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.