ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர்சங்கத்தில் (AMMA) கடந்த ஒரு மாத காலமாக நடந்து வரும் கலாட்டாக்கள் ஊரறிந்த ரகசியமாகி விட்டன. நடிகை விவகாரத்தில் சிக்கிய திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கும் முடிவை எடுத்தது என நடிகைகள் பலர் போர்க்கொடி தூக்கினர். இதன் அடுத்தகட்டமாக ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உட்பட நான்கு நடிகைகள் மலையாள நடிகர் சங்கத்தை விட்டு விலகினார்கள்.
இப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகைகள் பலரும் சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்கள். நடிகர் சங்கத்தின் நிர்வாக குழுவை கூட்டி திலீப் விஷயம் பற்றி விவாதிக்க வேண்டும் என இந்த அமைப்பிலிருந்து தலைவர் மோகன்லாலுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்தநிலையில் இந்த கோரிக்கைக்கு ஒரு நிபந்தனையுடன் செவி சாய்த்துள்ளது நடிகர் சங்கம். அதாவது தற்போது நடிகர் சங்கத்தில் உள்ள நடிகைகளுடன் இதுபற்றி விவாதிக்க தயார் என்றும், அதேசமயம் பெண்கள் நல அமைப்பு இதில் பங்கேற்க கூடாது என்றும் அதிரடியாக கூறியுள்ளனர்.
இதன்மூலம் சங்கத்தில் தற்போதும் உறுப்பினர்களாக தொடரும் பார்வதி, பத்மப்ரியா, ரேவதி போன்றவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் போன்ற சங்கத்தில் இருந்து விலகிய நடிகைகளுக்கு அனுமதி இல்லை என்பதை நாசூக்காக வெளிப்படுத்தியுள்ளனர்.