சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
நடிகராக, அதன்பின் தயாரிப்பாளராக மாறிய பிருத்விராஜ், அடுத்ததாக, மோகன்லால் ஹீரோவாக நடிக்க 'லூசிஃபர்' என்கிற படத்தின் மூலம் தான் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் .ஒருபக்கம் மோகன்லாலும் இன்னொரு பக்கம் பிருத்விராஜூம் மாறிமாறி பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் இந்தப்படம் இப்போதைக்கு துவங்கப்படுமா என்கிற சந்தேகம் இருதரப்பு ரசிகர்களுக்கும் இருந்துவந்தது.
இந்த நிலையில் வரும் ஜூலை-18ஆம் தேதி இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என பிருத்விராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் சார்பாக ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி கதை எழுதியுள்ளார். கடந்த மார்ச்சில் தான் முழு ஸ்கிரிப்ட்டையும் இறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.