காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
மலையாள திரையுலகம் மிகவும் பெருமையாக கருதும் 25-வது ஏசியாநெட் திரையுலக விருது வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. மலையாள திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில் நட்புக்காக, தமிழ்நாட்டில் இருந்து நடிகர்கள் கமல், நதியா, தமன்னா, ஆகியோர் கலந்து கொண்டு மலையாள ரசிகர்களையும் திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார்கள்..
மேலும் இந்தவிழாவில் விருதுபெற்ற பலருக்கும் தன் கையால் விருது வழங்கினார் கமல். கடந்த வருடத்திற்கான ஏசியாநெட் கோல்டன் ஸ்டார் விருதை கமல் கையால் பெற்றுக்கொண்டார் துல்கர் சல்மான். இது விருது வழங்கும் விழா என்றாலும் விருது பெற்றவர்களை விட அதிக கவனத்தை ஈர்த்தது சமீபத்தில் கண் சிமிட்டல் மூலமாக பிரபலமான புருவ அழகி பிரியா வாரியர் மற்றும் ரோஷன் ஜோடி தான்.