ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் ஆதிவாசி இளைஞர் ஒருவர் அரிசி திருடினார் என சந்தேகத்தின் பேரால் பொதுமக்கள் மற்றும் சில விஷமிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். இல்லையில்லை கொல்லப்பட்டார். நாடெங்கிலும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா முதல்வர் பிணராயி விஜயன் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நடிகர் மம்முட்டி, “தயவுசெய்து மதுவை ஆதிவாசி என அழைக்காதீர்கள். அவனை என் இளைய சகோதரன் என்று சொல்வேன். அவனை கும்பலாக கொன்றுவிட்டீர்கள்.. அவனும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கு உரிமையுள்ள மனிதன் தானே..
பசிக்காக திருடுபவனை நீங்கள் திருடன் என அழைக்க முடியாது. அது சமூகத்தின் அவலம். சட்டத்தை கையில் எடுத்துக்கொளும் சமூகம் எப்படி சக மனிதனுக்கு நியாயம் செய்யும்.. எங்களை மன்னித்துவிடு மது” என உருக்கமாக கூறியுள்ளார் மம்முட்டி.