14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தை தொடர்ந்து அடுத்தததாக இந்த வருடம் வெளியான 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' என்கிற படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினார்கள் பஹத் பாசிலும் இயக்குனர் திலீஷ் போத்தனும். இதை தொடர்ந்து மூன்றாவதாக ஒரு படத்தில் இருவரும் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதில் பாதிதான் உண்மை என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்த புதிய படத்தை பஹத் பாசிலும், திலீஷ் போத்தனும் இணைந்து தயாரிக்க உள்ளார்களாம். படத்தை இயக்கப்போவது திலீஷ் போத்தனின் உதவி இயக்குனரும் 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் பணியாற்றியவருமான மது சி.நாராயணன் என்பவர் தானாம். 'கும்ப்ளாங்கி நைட்ஸ்' என இந்தப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.