ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் திலீப்புக்கு நான்காவது முறையாக ஜாமின் மனு மறுக்கப்பட்டு தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில், அவர் நடித்து கடந்த சில மாதங்களாக ரிலீசுக்கு காத்திருந்த 'ராம்லீலா' என்கிற படம் வரும் செப்-28-ல் ரிலீஸாக இருக்கிறது. இதையொட்டி சில தினங்களுக்கு முன் ராம்லீலா படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது.
சமீபத்தில் நடிகர் திலீப் சிறையில் இருந்து அனுமதிபெற்று தனது தந்தையின் நினைவு நாள் காரியங்களில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து அந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களுக்கு திலீப்பின் மேல் இரக்கத்தை உருவாக்கி, அவர்களை தியேட்டர்களுக்கு வரவைப்பதற்காக செய்யப்பட்ட வியாபார தந்திரம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
ஒருவகையில் அது உண்மை தான் என்றாலும், படத்தின் இயக்குனர் அருண்கோபி அந்த போஸ்டர் குறித்து ஒரு ஆச்சர்யமான, அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது படத்தின் கதைப்படி, எம்.எல்.ஏவான திலீப், சில அரசியல் சூழ்ச்சிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுவாராம். பின் தான் நிரபராதி என நிரூபிக்க பல வகைகளில் முயற்சி செய்வாராம். இந்தசமயத்தில் கதைப்படி அவரது தந்தையின் நினைவு நாள் காரியங்களை செய்வதற்காக பரோலில் வந்து செல்வாராம்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் சமீபத்தில் வெளியான போஸ்டரில் இடம்பெற்றுள்ளனவாம். படத்தை வெளியிடும் நிறுவனம் இந்த விஷயத்தை தற்போதைய சூழலில் வியாபர, விளம்பர யுத்தியாக பயன்படுத்தினாலும், அதில் தவறென்ன இருக்கிறது என்கிறார் இயக்குனர்.
ஆனால் இந்தப்படத்திற்காக படமாக்கப்பட்ட காட்சிகள் இப்படி திலீப்பின் நிஜ வாழ்க்கையில் நிகழ்வுகளாக அமையும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஆச்சர்யம் விலகாமல் கூறுகிறார் இயக்குனர் அருண்கோபி.