ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்பெல்லாம் மலையாளத்தில் அறிமுகமான நடிகைகள் தமிழுக்கு வந்து பிரபலமானாலும் கூட தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளையும் சமமமாக நினைத்து நடித்து வந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி பரபரப்பை ஏற்படுத்திய நடிகைகள் பலரும் இப்போது மலையாள சினிமாவை கண்டுகொள்வதேயில்லை என்பது வேறு விஷயம்.. இதில் பல பேர் தமிழ் சினிமாவை கூட கண்டுகொள்ளாமல் தெலுங்கில் மையம் கொண்டுள்ளதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.
குறிப்பாக நிவின்பாலி ஜோடியாக அறிமுகமான ஹீரோயின்கள் பலரும் தெலுங்கில் லட்டு லட்டான வாய்ப்புகளை பெற்று தெலுங்கு ஹீரோயின்களாகவே மாறி வருகிறார்கள்.. 'பிரேமம்' படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக அறிமுகமான சாய் பல்லவிக்கும், அனுபமா பரமேஸ்வரனுக்கும் தெலுங்கு சினிமா சிவப்பு கம்பள வரவேற்பை அளித்துள்ளது. சமீபத்தில் சாய் பல்லவி நடித்த 'பிதா' படத்தின் வெற்றி, அவரது மார்க்கெட்டை இன்னும் உயர்த்தியுள்ளது.
அனுபமா பரமேஸ்வரனும் கிட்டத்தட்ட ஆறு தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார். அதில் மூன்று ரிலீஸாகி விட்டன. இன்னும் மூன்று படங்கள் படப்பிடிப்பிலும் போஸ்ட் புரடக்சன் பணிகளிலும் இருக்கின்றன. ஆனால் இதே பிரேமம் படத்தில் மூன்றாவது நாயகியாக நடித்த மடோனா செபாஸ்டியனை 'பிரேமம்' ரீமேக்கோடு தெலுங்கு திரையுலகம் அனுப்பிவிட்டது தனிக்கதை..
நிவின்பாலியுடன் 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தில் அறிமுகமான அனு இம்மானுவேலை மலையாளமும் தமிழும் அவ்வளவாக கண்டுகொள்ளாமல் தவிர்த்தபோது, தெலுங்கு திரையுலகம் அவரை வாரி அணைத்துக்கொண்டுள்ளது. தற்போது அவர் பவன் கல்யாணின் 25வது படம், மற்றும் அல்லு அர்ஜுனின் நா பேரு சூர்யா' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நிவின்பாலி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள ஐஸ்வர்யா லட்சுமிக்கு தெலுங்கில் கல்யாண் ராம் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது. ஆக நிவின்பாலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானால் பல ஹீரோயின்களுக்கு எதிர்காலம் ரொம்பவே பிரகாசமாக இருக்கும்போல தெரிகிறதே.