சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த காளகேயர்கள் என்கிற அம்சமும், அவர்கள் பேசுவதாக அமைக்கப்பட்ட கிளிக்கி மொழி பாஷையும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
குறிப்பாக குழந்தைகளிடம் இந்த கிளிக்கி மொழி ரொம்பவே பிரபலமானது. அதுமட்டுமா..? கொடூரமான உருவத்துடன் காளகேயர் பாஷை பேசிய அந்த காளகேயர் தலைவனை..? உடல் மொழியிலும் வசனத்திலும் தன்னை ஒரு காளகேயனாகவே மாற்றியிருந்த அந்த நடிகர் தான் பிரபாகர் என்பவர். அந்த கிளிக்கி பாஷைக்கும் தனது வித்தியாசமான உச்சரிப்பால் உயிர் கொடுத்தவர்.
தற்போது அவருக்கு தெலுங்கில் இருந்து மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது. அதுவும் மம்முட்டி படத்தில்.. 'பரோல்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான சரத் சந்தித் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக் கைதியாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள இந்தப்படத்தின் கதையை அஜித் பூஜப்புரா என்பவர் எழுதியுள்ளார்.