ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடந்த வாரம் மோகன்லாலை சோட்டா பீம், ஜோக்கர் என கிண்டலடித்து சர்ச்சையில் சிக்கியவர் தான் பாலிவுட் நடிகர்... இல்லையில்லை பாலிவுட்டில் ஒருசில படங்களில் மட்டுமே தலைகாட்டியுள்ள நடிகர் கமால் ரஷீத் கான். பின்னர் மோகன்லால் பற்றி தெரியாமல் விமர்சித்து விட்டேன் என பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். சரி ஒரு வழியாக மனிதர் அடங்கிவிட்டார் என நினைத்தால் நேற்று வெளியான 'பாகுபலி-2'வையும் அதன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பற்றியும் கிண்டலாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார் இந்த கான் நடிகர்.
ஊர் உலகமே 'பாகுபலி-2'வின் மேக்கிங்கை பிரமித்து பாராட்டிக்கொண்டு இருக்க, இது வெறும் கார்ட்டூன் படம் போல உள்ளது என்றும், நான் தியேட்டருக்கு வந்தது 'படம் பார்க்கத்தானே தவிர, கார்ட்டூன் பார்க்க அல்ல என்றும் நக்கலடித்துள்ளார் இந்த கமால் ஆர்.கான். மேலும் பாகுபலி முதல் பாகத்தை பார்த்துதான் தனக்கு தென்னிந்திய சினிமா பார்ப்பதற்கே ஆசை பிறந்தது என்றும் 'பாகுபலி-2'வை பார்த்ததும் இனிமேல் தென்னிந்திய சினிமா எதையுமே பார்க்க கூடாது என்று முடிவு செய்து விட்டதாகவும் 'பாகுபலி-2' மேல் சேற்றை வாரி இறைத்துள்ளார் இந்த கான் நடிகர்.
யார் கண்டது இன்னும் சில தினங்களில் இதற்கும் மன்னிப்பு கேட்டாலும் கேட்பார்.. அடுத்ததாக இன்னொரு பிரபலத்தை விமர்சிக்க கிளம்பிவிடுவார்... இவரது வாய்க்கு பூட்டு போடப்போவது யார் என்பதுதான் தெரியவில்லை.