ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரமாண்ட படம் என்றாலே படம் ரிலீசாவதற்குள் பல சிக்கல்களை சந்தித்துத்தான் வெளியாகவேண்டும் போல இருக்கிறது.. கடந்த சில நாட்களாக கன்னடத்தில் 'பாகுபலி-2' ரிலீஸாக விதிக்கப்பட்ட தடையை விளக்க போராடியது 'பாகுபலி-2' படக்குழு.. சத்யராஜ் மன்னிப்பு கேட்க ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது.. அடுத்ததாக ஆன்லைனில் மோசடி இணையதளம் மூலமாக பாகுபலி டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட விவாகரம் நேற்று முன் தினம் கிளம்பியது..
அது பற்றிய முடிவு தெரிவதற்குள் இப்போது கொச்சி மல்டிபிளக்ஸ் எனப்படும் கொச்சியில் உள்ள பி.வி.ஆர் காம்ப்ளக்ஸில் பாகுபலி-2' திரையிடப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஊரெங்கும் 'பாகுபலி-2' டிக்கெட் ஆன்லைன் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க, இன்னும் பி.வி.ஆர் சினிமாவில் புக்கிங் துவக்கப்படவில்லை. படங்களை திரையிடுவதில் தியேட்டர்கள் பங்கு சதவீதம் எவ்வளவு என்கிற முடிவு எட்டப்படாததால் இன்னும் புக்கிங் துவங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அனேகமாக இன்று இரவுக்குள் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணப்படும் என தியேட்டர் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.