ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் ஹிட்டான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இயக்குனர் விவி விநாயக் இயக்கி கைதி நம்பர் 150 படம் வசூலிலும் லாபம் பார்த்து வருகின்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது நடிப்பில் திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளதால்,சிரஞ்சீவி தனது மனைவி, மகள் மற்றும் மருகனுடன் சித்தூரில் உள்ள ஸ்ரீகாளகஸ்தி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை மற்றும் பிரார்தனை செய்துள்ளார். சிரஞ்சீவியைக் காண ரசிகர் கூட்டம் கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. காவலர்கள் உதவியுடன் சிரஞ்சீவி சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பி சென்றார்.