ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ப்ரூஸ் லீ படத்தின் தோல்விக்கு பின்னர் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து வரும் ராம் சரண், தமிழில் சூப்பர் ஹிட்டான தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். துருவா எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்த தனிஒருவன் டோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்க ராம் சரண் ஒப்பந்தமாகியுள்ளார். அதனுடன் இயக்குனர் க்ரிஷ் இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் ராம் சரண் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கஞ்சே படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் க்ரிஷ் அப்படத்தின் நாயகன் வருண் தேஜுடன் இணைந்து ராயபரி எனும் படத்தை துவங்கினார். ஆனால் அப்படம் அறிவிப்பின்றி கைவிடப்பட்டது. தற்போது அப்படத்தை ராம் சரணை வைத்து மீண்டும் உருவாக்கும் முயற்சியில் க்ரிஷ் இறங்கியுள்ளார். ரா ஏஜென்ட் வேடத்தில் ராம் சரண் நடிக்கவிருக்கும் இப்படத்தின் வேலைகள் 2017 செப்டம்பரில் துவங்கும் என கூறப்படுகின்றது.