ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஆதி அல்லு அர்ஜூனின் சரைய்னோடு படத்தில் வில்லதனம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். சரைய்னோடு படத்தில் வில்லனாக நடித்த ஆதிக்கு பாராட்டுகள் குவிந்ததுடன் அடுத்த வில்லன் வேடத்திற்கே வாய்ப்புகளும் குவிந்தன. இதனால் கவலையில் இருந்த ஆதிக்கு டோலிவுட் பெண் இயக்குனர், சசிகிரண் நாராயணா, நம்பிக்கை கொடுத்துள்ளார். மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் நாராயணின் மகளான சசிகிரண் நாராயணா, சஹெபா சுப்ரமணியம் படத்தை இயக்கினார் வணிக ரீதியாக தோல்வியைத் தழுவிய அத்திரைப்படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் சசிகிரண் உருவாக்கியுள்ள கதையை இயக்குனர் ஆதியிடம் கூறியுள்ளார். விசாகபட்டிணத்தை பின்புலமாக கொண்ட இப்படத்தின் கதை ஆதிக்கு பிடித்துப் போக, ஆதியும் இப்படத்தில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஆதிக்கு நாயகி தேடும் வேலையில் சசிகிரண் தற்போது ஈடுபட்டு வருகின்றாராம்.