ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
டோலிவுடின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாடுகின்றார் ராய் லக்ஷ்மி, இயக்குனர் வி.வி.விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்கும் இப்படத்தில் குத்தாட்டம் போடும் ராய் லக்ஷ்மியிடம் சிரஞ்சீவியுடன் பணியாற்றுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த ராய் லக்ஷ்மி சிரஞ்சீவி உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர், அவரது திறமையின் உயரத்தை புகழ்வதற்கு வார்த்தைகளே கிடையாது. சிரஞ்சீயுடன் ஒரு பாடலுக்கு ஜோடியாக நடிப்பதை பெருமையாக நிணைக்கின்றேன் என ராய் லக்ஷ்மி கூறியுள்ளார். முதலில் இக்குத்தாட்ட பாடலில் நடனமாட ஒப்பந்தமானவர் நடிகை கேத்ரின் திரைஷா, இறுதி நேரத்தில் கேத்ரின் படத்திலிருந்து நீக்கப்பட்டு, ராய் லக்ஷ்மி ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஹிட்டான கத்தி படத்தின் ரீமேக்கான இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார். நடிகை ஸ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.