ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள மெகாஸ்டார் மம்முட்டிக்கும் மலையாள ஆக்சன் கிங் சுரேஷ் கோபிக்கும் நீண்ட நாட்களாகவே ஒரு பனிப்போர் இருந்து வருவதாகவே சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ற மாதிரி ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதில்லை என்றும், பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதில்லை என்பதும் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இது இப்போதல்ல பல வருடங்களுக்கு முன்பே மனககசப்பால் ஏற்பட்டது என்றும் சொல்லப்பட்டு வந்தது. இத்தனைக்கும் இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த 2012ஆம் வருடம் இருவரும் இணைந்து 'தி கிங் அன்ட் கமிஷனர்' படத்தில் கூட ஒன்றாக நடித்தனர். இருந்தாலும் அவர்களது நிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்றும் படத்திற்காக மட்டுமே ஒன்று சேர்ந்து நடித்தார்கள் என்றும் சொல்லப்பட்டது.. ஆனால் சமீபத்தில் நடிகை மேனகாவின் மகளும் கீர்த்தி சுரேஷின் அக்காவுமான ரேவதி சுரேஷின் திருமண வைபவம் இருவரின் கோப தாபங்களை மறக்க செய்து மீண்டும் நட்பை துளிர்விட செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் கலந்துகொண்ட மம்முட்டியும் சுரேஷ்கோபியும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர். அதுமட்டுமல்ல நீண்ட நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருந்தனராம். இதைப்பார்த்த மலையாள திரையுலக வி.ஐ.பிக்கள் அப்பாடா 'ஒரு பனிப்போர் இப்போதாவது முடிவுக்கு வந்ததே' என மகிழ்ச்சியடைந்தார்களாம்.