ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் மலையாள நடிகர் ஜெயசூர்யா நடித்த 'பிரேதம்' மற்றும் 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' என இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானது.. இதில் ஜெயசூர்யாவின் பேவரைட் இயக்குனரான ரஞ்சித் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 'பிரேதம்' ஹிட்டானது.. அறிமுக இயக்குனரான ஷாஜித் யாஹியா என்பவரது இயக்கத்தில் நடித்த 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' சரியான வரவேற்பை பெற தவறியது.. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷாஜித் யாஹியாவுக்கும் ஜெயசூர்யாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் இயக்குனரை அடிக்க ஜெயசூர்யா கையை ஓங்கியதாகவும் ஒரு செய்தி நேற்று முன் தினம் இருந்து காட்டுத்தீபோல பரவியது.
ஆனால் ஒளிப்பதிவாளர் அழகப்பனை இயக்குனர் ஷாஜித் யாஹியா மரியாதைக்குறைவாக நடத்தியதால் தான் ஜெயசூர்யா கோபப்பட்டார் என்றும் அதனால் தான் இயக்குநரை அடிக்க கை ஓங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால் இந்த செய்தியை முற்றிலும் மறுக்கும் இயக்குனர், “இது யாரோ கட்டிவிட்ட கட்டுக்கதை.. ஒளிப்பதிவாளர் அழகப்பன் நான் மதிக்கும் ஒருவர்.. அதுமட்டுமல்ல நான் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை அமைதியாகவே அணுகுவேனே தவிர, யாரிடமும் மரியாதைக்குறைவாக நடந்துகொள்ள மாட்டேன்” என விளக்கம் அளித்துள்ளார்.