ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக மலையாள சினிமாக்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஓடுவது என்பது அரிதாகவே நடக்கிற விஷயம்.. ஏதோ அத்திப்பூத்தாற்போல ஒன்றிரண்டு படங்கள், அதுவும் ஏதாவது தெலுங்கு நடிகர்கள் அந்தப்படத்தில் இருந்தால் மட்டுமே டப்பிங் செய்யப்படும் வாய்ப்பை பெறும். ஆனால் மணிரத்னம் இயக்கிய தமிழ்ப்படமான 'ஒ காதல் கண்மணி' தெலுங்கிலும் டப்பிங் ஆகி ரிலீஸானதன் மூலமாக மலையாள நடிகரான துல்கருக்கு தெலுங்கில் கால் பாதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆம்.. அந்தப்படத்தால் அவருக்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
இதனை பயன்படுத்தி துல்கர் சல்மான் நடித்து அதே வருடம் மார்ச்சில் மலையாளத்தில் வெளியான '100 டேய்ஸ் ஆப் லவ்' படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் வேலைகளை அப்போதே ஆரம்பித்தார்கள்.. துல்கரை வைத்து மட்டுமே தெலுங்கில் படத்தை ரிலீஸ் பண்ணிவிடமுடியுமா..? ஒகே கண்மணியை போல இந்தப்படத்தின் கதாநாயகியும் தெலுங்கில் பாப்புலரான நித்யா மேனன் என்பதால் தான் டப்பிங் ரிலீசில் ஆர்வம் காட்டினார்கள்.. ஆனால் சில பல காரணங்களால் இந்தப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே வந்து, ஒரு வழியாக இன்று ஆந்திராவில் ரிலீசாகியும் விட்டது. இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் துல்கர் சல்மானும் நித்யா மேனனும் கலந்துகொண்டனர்.