ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த நான்கு வருடங்களாக வெளியாகி வரும் பிருத்விராஜின் படங்களை கவனித்து பார்த்தால் அதில் பெண்களை திட்டுவது போன்றோ, அல்லது மோசமான வசனங்களால் இழிவுபடுத்துவது போன்றோ காட்சிகள் இடம்பெறவே இல்லை என்பதை கண்டுபிடிக்கலாம்... அதற்கு காரணமும் இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் பிருத்விராஜ்.. தான் நடிகனாக மாறி, முன்னணி நாயகனாக வளர்ந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பஞ்ச் வசனங்களை பேசி நடித்ததை இப்போது நினைத்தால் சங்கடமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ்.
குறிப்பாக ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக சில வருடங்களுக்கு முன் தான் நடித்த 'வர்க்கம்' படத்தில் பெண்களை ரொம்பவும் மட்டமான வார்த்தைகளால் திட்டுவதுபோல நடித்திருந்ததை நினைவுபடுத்தும் பிருத்விராஜ், தனது வாழ்விலும் ஒரு பெண் நுழைந்தபின்தான், நிஜத்தில் மட்டுமல்ல, தனது படங்களிலும் கூட அவர்களை மோசமாக சித்திரிக்கும் காட்சிகளில் நடிக்க கூடாது என்கிற முடிவுக்கு வந்தாராம். இதுவரையிலான மலையாள சினிமாவில் இடம்பெற்ற மிகவும் தைரியமான பெண் கதாபாத்திரமாக மோகன்லாலின் 'தேவாசுரம்' படத்தில் ரேவதி ஏற்று நடித்த 'பானுமதி' கேரக்டரை குறிப்பிட்டு தன்னை மிகவும் கவர்ந்த பெண் அவள் தான் என பெருமிதமாக கூறியுள்ளார் பிருத்விராஜ்.