ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பிருத்விராஜ் நடிக்க வரும் முன்பே சினிமாவில் நுழைந்தவர்தான் அவரது அண்ணன் இந்திரஜித். ஆனால் பிருத்விராஜை போல, நடித்தால் ஹீரோ என்கிற நிலையை எல்லாம் வளர்த்துக்கொள்ளாமல், தனக்கு பொருந்துகிற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஒகே செய்பவர் தான் இந்திரஜித்.. கடந்த 2013ல் மட்டும் பத்து படங்களில் நடித்த இந்திரஜித், அதன்பின் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துக்கொண்டுவிட்டார்.. காரணம் நல்ல படங்களை மட்டும் தேர்வுசெய்து நடிக்க வேண்டும் என்பது தானாம்.
கடந்த வருடம் சூப்பர்ஹிட்டான 'அமர் அக்பர் அந்தோனி' படத்தில் தனது சகோதரர் பிருத்விராஜுடன் இணைந்து காமெடி வேடத்தில் கலக்கிய இந்திரஜித், தற்போது 'காடு பூக்குன்ன நேரம்' என்கிற படத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்டறிய காட்டுக்குள் செல்லும் போலீஸ் கான்ஸ்டபிளாக சீரியசான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் நாயகி ரீமா கல்லிங்கல் மாவோயிஸ்ட் கேரக்டரில் நடித்துள்ளாராம். காமெடி, சீரியஸ், அதேசமயம் வில்லன் என எந்த கேரக்டரிலும் தன்னை பொருத்திக்கொள்ள தயாராக இருக்கும் இந்திரஜித், அடுத்ததாக தனது சகோதரர் பிருத்விராஜுடன் இணைந்து 'தியான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.