மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
கடந்த மாதம் கேரளாவை உலுக்கிய மாணவி ஜிஷாவின் பாலியல் பலாத்கார படுகொலையை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.. சில வருடங்களுக்கு முன் டில்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டு பலியான நிர்பயாவின் மரணத்துக்கு இணையான ஒரு கொடூர நிகழ்வுதான் இதுவும்.. சட்டக்கல்லூரி மாணவியான ஜிஷா, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே இந்த கொடூர நிகழ்வுக்கு ஆளானதாக நாடெங்கிலும் இருந்து இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்தன.
ஜிஷாவின் இழப்பால் வாடும் அவரது தாயாருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நடிகர் ஜெயராம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். ஜெயராம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஆடுபுலியாட்டம்' படம் பலத்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, நேற்று எர்ணாகுளம் அருகில் உள்ள ஆலுவா வந்த ஜெயராம் அங்குள்ள தியேட்டர் ஒன்றில் சிசுபவன்' என்கிற குழந்தைகள் இல்லத்தை சேர்ந்த 180 குழந்தைகளுடன் படத்தை பார்த்து அவர்களுடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது கூட்டத்தில் பேசிய ஜெயராம், ஆடுபுலியாட்டம் படத்தில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை, மரணமடைந்த ஜிஷாவின் குடும்பத்துக்கு வழங்க முடிவுசெய்துள்ளதாக குறிப்பிட்டார்.