ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எஸ்.. மெகாஸ்டார் மம்முட்டியின் ஆத்மார்த்த நண்பரான இயக்குனர் ரஞ்சித்தே தான் இப்படி ஒரு அறிவிப்பை கசிய விட்டிருக்கிறார்.. கடந்த வாரம் தான் அவரது இயக்கத்தில் 'லீலா' என்கிற படம் வெளியாகி இருக்கும் வேளையில் திடீரென மம்முட்டி படத்தை இயக்குவதாக அறிவித்ததன் பின்னணியில் சில காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.. மம்முட்டியும் ரஞ்சித்தும் நம்ம ஊர் கே.எஸ்.ரவிகுமார்-சரத்குமார் மாதிரி பலமான நட்பு பின்னி கொண்டவர்கள்.. பாலேரி மாணிக்கம், குஞ்சானந்தண்டே கதா, ஒரு பத்திர கோலப்பதக்கத்திண்டே கதா' என பல படங்களில் இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் தான்.
அதனால் அடுத்து மம்முட்டியின் படத்தி இவர் இயக்குவதில் ஆச்சர்யம் இல்லைதான் என்றாலும் இந்த நேரத்தில் அவர் அறிவிக்க காரணம் சிலருக்கு பதிலடி கொடுக்கதானாம். கேரள சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தவர் கேரளா சினிமா எக்ஸிபிடர்ஸ் சங்க தலைவரான லிபர்ட்டி பஷீர். சமீபத்தில் வெளியான ரஞ்சித்தின் 'லீலா' படத்தை தியேட்டரில் வெளியாகவிடாமல் நிறைய குடைச்சல் கொடுத்தார்.. அதையும் மீறி ரஞ்சித்தின் படம் வெளியானாலும், நிறைய தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது. அதனால் தான் அடுத்ததாக மம்முட்டி படத்தை இயக்கினால் லிபர்ட்டி பஷீரால் ஒன்றும் செய்யமுடியாது என்பதால் தான் மம்முட்டி படத்தை தனக்கு கேடயமாக பயன்படுத்திக்கொள்ள போகிறார் ரஞ்சித்.