ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'தனி ஒருவன்'. அந்தப் படத்திற்கு முன் ரீமேக் படங்களையே இயக்கி வந்த இயக்குனர் மோகன் ராஜா, சொந்தமாக ஒரு கதையை உருவாக்கி அதை பலரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வெற்றிப் படமாக மாற்றினார். படம் வெளிவந்து வெற்றி பெற்ற உடனே மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. தெலுங்கில் இப்படத்தின் ரீமேக்கில் ராம் சரண் நடிக்க உள்ளார்.
தெலுங்குக்காக சில மாற்றங்களைச் செய்யலாம் என படத்தை இயக்க உள்ள சுரேந்தர் ரெட்டி கடந்த சில வாரங்களாக திரைக்கதையில் மாற்றங்களைச் செய்து சில புதிய காட்சிகளை உருவாக்கியுள்ளார். அவற்றைக் கேட்ட ராம் சரண், எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். ஒரிஜனலாக தமிழ்ப் படத்தில் என்ன இருந்ததோ அதை அப்படியே படமெடுங்கள் என்று இயக்குனரிடம் தெரிவித்துள்ளாராம். தெலுங்குக்காக மிகச் சிறிய சில மாற்றங்களை மட்டுமே செய்யலாம் எனக் கூறிவிட்டாராம்.
நாயகனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு படத்தில் வில்லனுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதை ராம் சரண் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று தெலுங்குத் திரையுலகினர் ராம் சரணின் முடிவைப் பற்றி கமெண்ட் அடித்து வருகிறார்களாம்.