ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஸ்ரீமந்துடு படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார். பாகுபலி படத்தைத் தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் அதிக வசூல் செய்துள்ள ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் மகேஷ் பாபு பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார். சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று நாயகிகள் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்குகின்றார். பிவிபி நிறுவனத்துடன் மகேஷ் பாபு இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தொலைகாட்சி உரிமத்தைக் கைப்பற்ற தெலுங்கு தொலைகாட்சிகளுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவுகின்றதாம். அதிக தொகைக்கு இப்படத்தின் தொலைகாட்சி உரிமம் விலைபோகும் எனவும் கூறப்படுகின்றது. பாகுபலி படத்திற்கு அடுத்து ரூ.20 கோடி வரை பிரம்மோற்சவம் படத்தின் தொலைக்காட்சி உரிமம் விலைபோகலாம் எனவும் கூறப்படுகின்றது.