ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாளத்தில் காஞ்சனமாலா - மொய்தீன் உண்மை காதல்கதையை வைத்து வெளியாகி ஹிட்டான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில், எப்படி பிருத்விராஜ் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என காஞ்சனமாலா சொன்னாரோ, அதேபோல காஞ்சனமாலா கதாபாத்திரத்தில் நடிக்க பார்வதி தான் சரியான நபராக இருப்பார் என முடிவுசெய்த இயக்குனர் ஆர்.எஸ்.விமல் வேறெந்த சமரசமும் செய்துகொள்ளாமல் அவரையே நடிக்கவைத்தார். அவரும் படத்தில் காஞ்சனமாலாகவே வாழ்ந்திருந்தார். இப்போது மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்ட த்ரிஷ்யம்' புகழ் டெரர் நாயகி ஆஷா சரத், தானும் ஒருகாலத்தில் காஞ்சனமாலாவாக நடித்த கதையை ஒரு பேட்டியின்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது 21 வருடங்களுக்கு முன்பு அவர் கல்லூரியில் படித்துவந்த காலகட்டத்தில் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தாராம். அந்தசமயத்தில் காஞ்சனமாலா - மொய்தீன் கதை கல்லூரி மாணவர்களிடையே ரொம்பவும் பேமஸாம்.. அப்போது காஞ்சனமாலா - மொய்தீன் காதல்கதை பற்றி அப்போது ஒரு டெலிபிலிம் எடுக்கப்பட்டபோது அதில் காஞ்சனமாலாவாக நடித்தவர் ஆஷா சரத் தானாம். தான் பல வருடங்களுக்கு முன் நடித்த ஒரு கதாபாத்திரம் இப்போது சென்சேஷனல் செய்தியானது குறித்து சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஆஷா சரத்.