ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மம்முட்டியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு தமிழ்சினிமாவிலும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுத்தது என்றால் அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான 'ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு' படம் தான். இந்தப்படத்தில் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் வழக்கத்திற்கு மாறான மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி. இதுவரை இந்திய மொழிகளில் ஒரு படம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்குமுறை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது இந்தப்படமாகத்தான் இருக்கும்.
இந்தப்படத்தின் இரண்டாவது பாகமான 'ஜகார்த்தா 1989ல் வெளியானது. ஆனால் சுமாராகத்தான் போனது. அதன்பிறகு இதன் அடுத்தடுத்த பாகங்களாக 2004ல் 'சேதுராமையர் சி.பி.ஐ' வெளியாகி வெற்றி பெற, 2005ல் நான்காவது பாகமாக வெளியான 'நேரறியான் சி.பி.ஐ' தோல்வியை தழுவியது. பத்து வருடங்கள் கழித்து இப்போது ஐந்தாவது பாகத்தை எடுப்பதற்கான ஆயுத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவாம். இதிலும் வழக்கம்போல மம்முட்டி தான் ஹீரோ.. முதலாம், மூன்றாம் பாகங்களின் வெற்றி செண்டிமெண்ட் இந்த ஐந்தாம் பாகத்திற்கும் ஒர்க் அவுட் ஆகும என்றே சொல்கிறார்கள்..