ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பார்வதி(மேனன்) சினிமாவை விட்டு விலகப்போகிறார் என சமீபத்தில் ஊடகங்களில் பரவிய செய்தி, மலையாள ரசிகர்களை பதைபதைக்க வைத்தது. திறம்மையான நடிகையாக இருந்தாலும் சில வருடங்களாக மலையாள சினிமாவில் கவனிக்கப்படாமல் இருந்த பார்வதி, கடந்த வருடம் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் ஆர்.ஜே.சாராவாக நடித்து ரசிகர்களின் மனதில் நுழைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்தார்.. சமீபத்தில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் காஞ்சனமாலாவாகவே வாழ்ந்திருந்த பார்வதியின் நடிப்பை பாராட்டாத ஜனம் பாக்கியில்லை.. சொல்லப்போனால் அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் இப்போதுதான் துவங்கியிருக்கிறது.
இந்த நிலையில் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கப்போவதாக செய்தி வெளியானதால் ரொம்பவே டென்சன் ஆகிவிட்டார் பார்வதி. சமீபத்தில் மலையாள நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “சினிமா என்பது என் கனவு.. அதை நான் ரசித்து அனுபவித்து கொண்டிருக்கிறேன்.. சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என ஒருபோதும் சொல்லவே இல்லையே.. பின் ஏன் சில மீடியாக்கள் இப்படி செய்திகளை திரித்து வெளியிடுகின்றன.. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் குறைந்தபட்சம் என்னிடம் கேட்டு அதை உறுதிப்படுத்தியிருக்கலாமே.. நான் இப்போதும் மீடியா மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்” என சீறியிருக்கிறார் பார்வதி. அப்படி சினிமாவைவிட்டு விலகுவதாக இருந்தால், தானே அந்த அறிவிப்பை தைரியமாக வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார் பார்வதி.