ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது தாயின் வழியிலேயே நடிப்பில் இறங்கிவிட்டார். கடந்த வருடம் அவர் நடிப்பில் குஞ்சன் சக்சேனா என்கிற படம் வெளியானது. இந்த நிலையில், தமிழில் கடந்த 2018ல் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆர்வமில்லையா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டுமே அதுபற்றி பரிசீலிப்பேன் என கூறியுள்ளார். மேலும் தெனிந்திய மொழிகளில் மலையாள படங்கள் தன்னை அதிகம் கவர்ந்துள்ளதாக கூறியுள்ள ஜான்வி, சமீபத்தில் ட்ரான்ஸ் என்கிற படத்தை பார்த்ததாகவும் அதில் பஹத் பாசிலின் நடிப்பு சூப்பராக இருந்தது என்றும் கூறியுள்ளார். அதனால் மலையாள படங்களில் நடிக்க தனி ஆர்வம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.