சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து கடந்த சங்கராந்திக்கு வெளியான படம் ஜெய்சிம்ஹா. நயன்தாரா நாயகியாக நடித்த இந்த படத்தில் ஹரிப்பிரியா, நடாஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆந்திரா, தெலுங்கானா தவிர்த்து, வெளிநாடுகளிலும் திரையிடப்பட்ட இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலித்து, ரூ.50 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது.
இதை ஒரு விழாவாக கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஜெய்சிம்ஹா படக்குழுவினர் மட்டுமின்றி தனது நட்பு வட்டார நடிகர் நடிகைகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் பாலகிருஷ்ணா. இந்த நிகழ்ச்சியின்போது, தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்டு மாதம் தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை தேஜா இயக்குகிறார்.