ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தி திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அஜய் தேவ்கன். தற்போது இவர் இயக்கி, நடித்து, தயாரித்து வெளிவரவிருக்கும் படம் ‛சிவாய்'. இப்படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் அஜய். சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அரசியலை பார்த்து ஒட்டுமொத்த பாலிவுட்டும் பயம் கொள்வதாக கூறியுள்ளார் அஜய்.
இதைப்பற்றி அஜய் மேலும் கூறியதாவது... "எனக்கு நாட்டுப்பற்று மிகவும் அதிகம். என் நாட்டுகாக நான் எப்போது உறுதுணையாக இருப்பேன். ஆனால் அரசியல் என்று கூறும்போது ஒரு நடிகனாக பயம் கொள்கிறேன். நடிகர்கள் அரசியல் பற்றி ஏதேனும் சொன்னால் போதும், அவ்வளவுதான் ஒருபிரிவினர் எங்களை எதிர்க்க துவங்கி விடுவார்கள் இல்லையென்றால் தடை செய்து விடுவார்கள்'' இது தான் இன்று தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
‛சிவாய்' படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.