ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரூ.500 கோடி ரூ.600 கோடி என்று பாலிவுட் படங்கள் மட்டுமே வசூலில் சாதனை படைத்து வந்தநிலையில், தென்னிந்திய படம் ஒன்றும் ரூ.600 கோடி வசூலித்தது பாலிவுட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்தப்படம், சமீபத்தில் ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான பாகுபலி படம் தான். உலகம் முழுக்க சுமார் 4000 தியேட்டர்களில் வெளியான பாகுபலி படம் 50 நாட்களை கடந்து தற்போதும் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் சுமார் ரூ.600 வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியில் மட்டும் சுமார் ரூ.120 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. டப்பிங் படம் ஒன்று இந்தளவு வசூல் பெறுவது இதுவே முதன்முறையாகும்.