Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

புரொமோஷன் போது கவனமாக இருந்தேன் - பவாத் கான் பேட்டி!

23 செப், 2014 - 21:02 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில் வெளியான கூப்சூரத் படத்தில் சோனம் கபூருடன் நடித்தவர் பவாத் கான். பாகிஸ்தானை சேர்ந்த இவர் இப்படத்தில் ராஜ்பட் இளவரசராக நடித்திருந்தார். இந்திய படங்களில் நடிப்பது குறித்தும், எந்தளவுக்கு இந்திய படங்களை ரசிக்கிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ உங்களுக்காக...

இன்ப அதிர்ச்சி

கடந்தாண்டு ஜனவரி மாதம், கூப்சூரத் படத்தின் இயக்குநரிடமிருந்து அழைப்பு வந்தது. என்னைப்பற்றியும், எனது உழைப்பு பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும். அதனால் இப்படத்தில் நடிப்பது பற்றி கபூர் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசினார். பிறகு அவர்கள் சம்மதம் சொன்னதை தொடர்ந்து என்னிடம் இந்தப்படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டார், எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சியாக இருந்தது, உடனே சம்மதம் சொன்னேன். முன்னதாக நடிப்பதற்கு முன்பாக படத்தின் கதையையும், ஏற்கனவே வெளிவந்த கூப்சூரத் படத்தையும் ஒருமுறைக்கு பலமுறை பார்த்து தெரிந்து, புரிந்து கொண்டேன்.

குடும்பத்தில் ஒருத்தனாக பாவித்தனர்

சோனம் கபூர் மற்றும் கபூர் தயாரிப்பு நிறுவனத்தின் பணிபுரிந்தது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. ஷூட்டிங் என்று வரும் போது சோனம் கபூர், தொழிலில் மிகுந்த பக்தியாக இருப்பார், அதேசமயம் கேமிராவுக்கு பின்னால் எல்லோரிடமும் சகஜமாமக பேசி பழகுவார். இந்தப்படத்தில் நடிக்கும் போது ஒட்டுமொத்த டீமும், கபூர் குடும்பமும், என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவனாக பாவித்தனர். சினிமா சார்ந்தும், தனிப்பட்ட முறையிலும் கபூர் குடும்பத்துடனான எனது உறவு நன்றாகவே இருக்கிறது.

பழைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது

பொதுவாக ரீ-மேக் படங்கள் என்றாலே பழைய படத்தினை அப்படியே எடுக்கின்றனர் என்ற ஒரு எண்ணம் எல்லோரிடமும் பதிந்துவிட்டது. ஆனால் கூப்சூரத் படத்தை பொறுத்தமட்டில் பழயை படத்திற்கும், இப்போது வெளிவந்திருக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது, நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம். பழைய கூப்சூரத் படத்தில் ஹீரோவின் குடும்பம் மிகப்பெரியது, ஆனால் புதிய கூப்சூரத்தில் எனது குடும்பம் மிகச்சிறியது. இதுப்போன்று நிறைய விஷயங்கள் உள்ளன, மொத்தத்தில் பழைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது புதிய கூப்சூரத் படம்.

நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு

எனது டெலிவிஷன் நிகழ்ச்சியான ஜிந்தேகி குல்சார் ேஹ-யால் எனக்கு நிறைய புகழ் கிடைத்துள்ளது உண்மைதான். அதேசமயம் இங்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த புகழால் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. டிவி நிகழ்ச்சியில் கிடைத்த புகழால் சினிமா வாய்ப்பு கிடைத்தது, அதனால் நன்மை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ரசிகர்களின் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யவில்லை என்றால் சினிமாவில் நான் தோற்றுவிடுவேன், அப்போது அது தீமையாகிவிடும்.

அமிதாப்பின் பல படங்களை பார்த்துள்ளேன்

இந்தி படங்களில் மீது எனக்கு அவ்வளவாக நாட்டம் கிடையாது, ஆனால் இந்தி சினிமாவை பற்றி ஓரளவுக்கு தெரியும். எனது பெற்றோர்கள் இந்தி படங்களை விரும்பி பார்ப்பார்கள், அவர்களோடு சேர்ந்து நானும் சில இந்தி படங்களை பார்த்துள்ளேன். உதாரணமாக மிஸ்டர் இந்தியா, சதேபி சதா, மினிஸ்டர் நட்வர்லா என்று சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் நான் அமிதாப் பச்சனின் நிறைய இந்தி படங்களை பார்த்துள்ளேன்.

புரொமோஷன் போது கவனமாக இருந்தேன்

ஒரு படத்தை எடுப்பதை காட்டிலும், அதை புரொமோஷன் செய்வது ரொம்ப ரொம் கஷ்டம். ஷூட்டிங் போது ஏதாவது தப்பாக செய்தால், அதை கட் செய்துவிட்டு மீண்டும் எடுத்து கொள்ளலாம், ஆனால் புரொமோஷன் போது ஏதாவது தவறாக பேசிவிட்டால் அது பெரிய பிரச்னையாகிவிடும், இதனால் புரொமோஷன் போது ரொம் கவனமாக இருந்தேன், ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக பேசினேன்.

குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்

எனது குடும்பத்துடன் எப்போதும் நேரத்தை செலவிட ரொம்பவே விரும்புவேன். குறிப்பாக எனது மகனுடன் விளையாடி மகிழ்வேன். எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடும்போது, ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். கடவுள் நிஜமாகவே எனக்கு ஒரு அழகிய குடும்பத்தை கொடுத்துள்ளார், அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in