ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவந்த சன்னி லியோன் சமீப காலமாக சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தமிழில் அவர் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இன்று (பிப்-5) மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் அமைந்துள்ள கட்டகஞ்சே பங்க் என்கிற பகுதியில் நடைபெற உள்ள பேஷன் ஷோவில் கலந்து கொள்ள உள்ளார் சன்னி லியோன்.
அதேசமயம் நேற்று காலை இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் அருகில் உள்ள இடத்தில் மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது. இது அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் இன்று அந்த பேஷன் ஷோ நடைபெறுமா ? அப்படியே நடைபெற்றாலும் சன்னி லியோன் அதில் கலந்து கொள்வாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.. கதர் மற்றும் கைத்தறி துணிகளை புரமோட் பண்ணும் விதமாக இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.