அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
குறும்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் தினேஷ் பழனிவேல் கதிர் என்ற படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது, 25 வயதுக்குள் எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கும் ஒரு இளைஞன், வாழ்க்கையை உற்சாகமாக வைத்திருக்கும் 65 வயது மூதாட்டியிடம் ஞானம் பெறுவது தான் இந்தப் படத்தின் கதைக் களம். கதிரின் கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் சாவித்திரிப் பாட்டியின் 'பிளாஷ் -பேக்' கதையும் பார்வையாளர்களுக்கு இரண்டு மாறுபட்ட உணர்வுகளைக் கொடுக்கும்.
கதாநாயகனாக வெங்கடேஷ் அறிமுகமாகிறார். சாவித்திரி பாட்டியாக 'ஒரு முத்தசி கதா' மலையாளப் படத்தின் மூலம் புகழ்பெற்றிருக்கும் ரஜினி சாண்டி நடிக்கிறார். அவரைத் தமிழுக்குக் கொண்டு வருவது எங்களுக்குக் கிடைத்த கௌரவம். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், பவ்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'அங்கமாலி டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு' உட்பட 50-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்துவிட்ட முன்னணி இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். முதியவர்களின் அனுபவம் இளைய தலைமுறைக்கான வரம் என்பதை படம் விளக்கும்.