‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா? | 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி தரும் வின்சென்ட் செல்வா | 'எம்.குமரன்' ரீ-ரிலீஸ் : நதியா மகிழ்ச்சி | குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகும் தேதி, ரசிகர்கள் அதிர்ச்சி | பிரகாஷ்ராஜ், ராணா, விஜய் தேவரகொன்டா மீது வழக்கு பதிவு | ஐபிஎல் சீசன் : இரண்டு மாதங்களுக்கு தியேட்டர்களுக்கு சிக்கல் | 'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் |
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் இதுவரை சந்தியாவுக்கு ஆதரவாக இருந்த அவரது கணவர் சரவணன், தற்போது சந்தியாவை வெறுத்து ஒதுக்க தொடங்கிவுள்ளார்.
சரவணன் தன்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரியாத சந்தியா கடைக்கு சென்று அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், சந்தியாவை கடைசி வரை கண்டுகொள்ளாத சரவணன் கஸ்டமர்களை கவனிக்கிறார். அப்போது கடைக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்த நண்பர் படித்த பெண்ண திருமணம் செய்தால் பிரச்னை. நம்மை மதிக்கமாட்டார்கள். அதனால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது என்று கூற அதை சரவணனும் ஒத்துக்கொள்கிறார். இதைக்கேட்ட சந்தியா அதிர்ச்சியுடன் வீடு திரும்புகிறார்.
அதன்பின் வீட்டிற்கு வரும் சரவணன் சந்தியாவையும் இனிமேல் சாப்பாட்டு கொண்டு வர வேண்டாம் என்று சொல்கிறார். இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள விரிசலுக்கு காரணம் புரியாமல் தவிக்கும் சந்தியா, சரவணனை எப்படி சமாதான செய்யப் போகிறார் என்ற கேள்வியுடன் இன்றைய எபிசோடு தொடர்கிறது.