பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் சமூக சேவை நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
திரையுலகத்தில் உள்ள சோனு சூட், சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்ட நடிகர்கள் சிலர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
'கேஜிஎப் 2, சலார்' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்களான ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தினர் மாண்டியாவில் 2 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களையும், 20 ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்கள். மேலும் 'சலார்' படக்குழுவினர் 150 பேருக்கு தலா 5000 ரூபாய் வழங்கியுள்ளார்கள். மேலும், தெலுங்கு பிலிம் சேம்பர் உறுப்பினர்கள் 3200 பேருக்காக 35 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இப்படியான உதவிகளைச் செய்து கொடுத்ததாக ஒரு தகவல் கூட இதுவரை வெளிவரவில்லை. பெப்ஸி சங்கத்திற்கு மட்டும் அஜித், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் நிவாரண உதவிகளை அளித்துள்ளனர்.
கடந்த வருடம் முதல் அலை வந்த போது கிடைத்த உதவிகளை விட இந்த முறை உதவிகள் குறைவாகவே கிடைத்துள்ளன. பெப்ஸி சார்பில் 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தும் கூட தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் உதவி செய்ய முன் வராதது ஏன் என்று தெரியவில்லை.