இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
பிரபல தமிழ்பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர். சூர்யா நடித்த கஜினி, விஜயகாந்த் நடித்த சபரி, பரத் நடித்த பிப்ரவரி 14, கில்லாடி ஆகிய படங்களை தயாரித்தார். கஜினி படம் தவிர மற்ற படங்கள் அவருக்கு நஷ்டத்தை கொடுத்ததால் சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
59 வயதான சந்திரசேகர் சேலத்தில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.