அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் |

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் சுல்தான் படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் படத்தின் வசூல் திருப்திகரமாக உள்ளது. தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்நிலையில் இணையதளத்தில் கார்த்தி, ராஷ்மிகா ரசிகர்கள் உடன் கலந்துரையாடினர். அப்போது பொன்னியின் செல்வன் படம் பற்றி கார்த்தியிடம் கேள்வி கேட்டார் ராஷ்மிகா.
அதற்கு, ‛‛பொன்னியின் செல்வன் இரண்டு பகாங்களாக வெளிவர உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. 60 ஆண்டுகாலமாக இதை படமாக்க தமிழ் சினிமா முயற்சித்து வந்தது. ஆனால் அது இப்போது தான் நடந்துள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்துள்ளோம். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா பிரச்னையால் படப்பிடிப்பு தாமதமாகிறது. 2022ல் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார் கார்த்தி.




