கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் |
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் சுல்தான் படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் படத்தின் வசூல் திருப்திகரமாக உள்ளது. தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்நிலையில் இணையதளத்தில் கார்த்தி, ராஷ்மிகா ரசிகர்கள் உடன் கலந்துரையாடினர். அப்போது பொன்னியின் செல்வன் படம் பற்றி கார்த்தியிடம் கேள்வி கேட்டார் ராஷ்மிகா.
அதற்கு, ‛‛பொன்னியின் செல்வன் இரண்டு பகாங்களாக வெளிவர உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. 60 ஆண்டுகாலமாக இதை படமாக்க தமிழ் சினிமா முயற்சித்து வந்தது. ஆனால் அது இப்போது தான் நடந்துள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்துள்ளோம். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா பிரச்னையால் படப்பிடிப்பு தாமதமாகிறது. 2022ல் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார் கார்த்தி.