நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்வேதா பாசு, தமிழில் ரா ரா, சந்தமாமா போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைதாகி அந்த மன அழுத்தத்தால் அதிலிருந்து மீண்டு வந்தார். கடந்த 2018ம் ஆண்டில் ரோகித் மெட்டல் என்ற ஹிந்திப்பட இயக்குனரை திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா பாசு, கருத்து வேறுபாடு காரணமாக எட்டே மாதங்களில் அவரை பிரிந்தார்.
தற்போது படங்களிலும், சீரியல்கள் மற்றும் வெப்சீரிஸலும் நடிக்கும் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''விவாகரத்துக்கு பிறகு நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.எனது திருமண வாழ்க்கை எட்டே மாதத்தில் முடிவுக்கு வந்து விட்டது. விவாகரத்துக்கு பிறகுதான் என் வாழ்க்கையில் பல மாற்றங்களும், மகிழ்ச்சியும் கிடைத்து வருகிறது என்றார் ஸ்வேதா.