பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ல் வெளியான படம் ‛புலி'. இந்த காலக்கட்டத்தில் அதாவது 2015 - 16ம் நிதியாண்டில் ரூ.35.42 கோடி வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரி தாக்கல் செய்தார் விஜய். ஆனால் புலி படத்திற்காக அவர் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்து இதை வெளியிட்டதாக வருமான வரித்துறை கண்டறிந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை.
வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை இன்று(பிப்., 6) வழங்குவதாக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த விதிமுறையும் மீறப்படவில்லை. அவருக்கு அபாராதம் விதித்தது செல்லும் என கூறி அவரின் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி செந்தில் குமார ராமமூர்த்தி உத்தரவிட்டார்.