ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ல் வெளியான படம் ‛புலி'. இந்த காலக்கட்டத்தில் அதாவது 2015 - 16ம் நிதியாண்டில் ரூ.35.42 கோடி வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரி தாக்கல் செய்தார் விஜய். ஆனால் புலி படத்திற்காக அவர் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்து இதை வெளியிட்டதாக வருமான வரித்துறை கண்டறிந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை.
வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை இன்று(பிப்., 6) வழங்குவதாக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த விதிமுறையும் மீறப்படவில்லை. அவருக்கு அபாராதம் விதித்தது செல்லும் என கூறி அவரின் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி செந்தில் குமார ராமமூர்த்தி உத்தரவிட்டார்.