ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
'இமைக்கா நொடிகள்' மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா, தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4, அகத்தியா படங்களில் நடித்தார். தற்போது 'பார்ஜி-2' என்ற ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் ஆக்ஷன் நாயகியாக நடிக்கும் ராஷி கண்ணா கடந்த சில நாட்களாக சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.
நேற்று நடந்த படப்பிடிப்பில் ராஷி கண்ணா உயரமான மேடை ஒன்றில் இருந்து கீழே குதித்தார். இதில் டைமிங் மிஸ்சாகி தரையில் விழுந்தார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. உள்காயத்தால் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. கை மற்றும் கால்களிலும் காயம் ஏற்பட்டது.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ராஷிகா இல்லாத காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராமில், "சில கதாபாத்திரங்களுக்கு தேவையானதை செய்துதான் ஆக வேண்டும். ஏற்படும் காயங்களை பொருட்படுத்தக்கூடாது. நாமே புயல் ஆன பிறகு, இடி-மின்னல் என்ன செய்துவிடும்?", என்று பதிவிட்டுள்ளார்.