கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
'இமைக்கா நொடிகள்' மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா, தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4, அகத்தியா படங்களில் நடித்தார். தற்போது 'பார்ஜி-2' என்ற ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் ஆக்ஷன் நாயகியாக நடிக்கும் ராஷி கண்ணா கடந்த சில நாட்களாக சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.
நேற்று நடந்த படப்பிடிப்பில் ராஷி கண்ணா உயரமான மேடை ஒன்றில் இருந்து கீழே குதித்தார். இதில் டைமிங் மிஸ்சாகி தரையில் விழுந்தார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. உள்காயத்தால் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. கை மற்றும் கால்களிலும் காயம் ஏற்பட்டது.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ராஷிகா இல்லாத காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராமில், "சில கதாபாத்திரங்களுக்கு தேவையானதை செய்துதான் ஆக வேண்டும். ஏற்படும் காயங்களை பொருட்படுத்தக்கூடாது. நாமே புயல் ஆன பிறகு, இடி-மின்னல் என்ன செய்துவிடும்?", என்று பதிவிட்டுள்ளார்.