அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக் ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரவலாக நடித்து வரும் இவர் தற்போது சூரிக்கு ஜோடியாக ‛மாமன்' படத்தில் நடித்துள்ளார். ஒரு சிறுவனுக்கும், அவனது தாய்மாமனுக்கும் இடையே நடக்கும் பாசத்தை வைத்து குடும்ப படமாக எடுத்துள்ளனர். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். ராஜ்கிரண், சுவாசிகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மே 16ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : ‛‛சூரி மிகவும் நேர்மையான மனிதர். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை உள்ளது. அவர் பேசும் வார்த்தைகளிலும் அன்பு, மரியாதை உள்ளது. அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கு பெருமையாக உள்ளது'' என்றார்.