என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக் ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரவலாக நடித்து வரும் இவர் தற்போது சூரிக்கு ஜோடியாக ‛மாமன்' படத்தில் நடித்துள்ளார். ஒரு சிறுவனுக்கும், அவனது தாய்மாமனுக்கும் இடையே நடக்கும் பாசத்தை வைத்து குடும்ப படமாக எடுத்துள்ளனர். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். ராஜ்கிரண், சுவாசிகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மே 16ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : ‛‛சூரி மிகவும் நேர்மையான மனிதர். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை உள்ளது. அவர் பேசும் வார்த்தைகளிலும் அன்பு, மரியாதை உள்ளது. அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கு பெருமையாக உள்ளது'' என்றார்.