பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கயாடு லோஹர். மாடலிங் போட்டிகளில் நுழைந்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர். கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். அடுத்த வாரம் வெளியாக உள்ள 'டிராகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அந்தப் படத்தை அடுத்து 'இதயம் முரளி' படத்திலும் நடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வியாழனன்று மாலை 'இதயம் முரளி' படத்தின் அறிவிப்பு நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல் முறையாக மேடையேறிப் பேசினார். அந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற 'டிராகன்' படத்தின் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஏற்கெனவே, 'இதயம் முரளி' நிகழ்ச்சியில் மேடையேறி முதல் முறையாகப் பேசியவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த 'டிராகன்' நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது, “இதுதான் என்னுடைய முதல் மேடை, அதனால் ரொம்ப பதட்டமாக இருக்கிறேன்,” என பேசி அதிர்ச்சி அளித்தார்.
ஆரம்பத்திலேயே நன்றாகப் பொய் பேசும் கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் பிழைத்துக் கொள்வார்.