மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை | பிளாஷ்பேக் : எம்ஜிஆர் விழா நடத்தி விருது கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோ | நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு |
அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கயாடு லோஹர். மாடலிங் போட்டிகளில் நுழைந்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர். கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். அடுத்த வாரம் வெளியாக உள்ள 'டிராகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அந்தப் படத்தை அடுத்து 'இதயம் முரளி' படத்திலும் நடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வியாழனன்று மாலை 'இதயம் முரளி' படத்தின் அறிவிப்பு நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல் முறையாக மேடையேறிப் பேசினார். அந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற 'டிராகன்' படத்தின் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஏற்கெனவே, 'இதயம் முரளி' நிகழ்ச்சியில் மேடையேறி முதல் முறையாகப் பேசியவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த 'டிராகன்' நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது, “இதுதான் என்னுடைய முதல் மேடை, அதனால் ரொம்ப பதட்டமாக இருக்கிறேன்,” என பேசி அதிர்ச்சி அளித்தார்.
ஆரம்பத்திலேயே நன்றாகப் பொய் பேசும் கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் பிழைத்துக் கொள்வார்.