பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கயாடு லோஹர். மாடலிங் போட்டிகளில் நுழைந்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர். கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். அடுத்த வாரம் வெளியாக உள்ள 'டிராகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அந்தப் படத்தை அடுத்து 'இதயம் முரளி' படத்திலும் நடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வியாழனன்று மாலை 'இதயம் முரளி' படத்தின் அறிவிப்பு நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல் முறையாக மேடையேறிப் பேசினார். அந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற 'டிராகன்' படத்தின் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஏற்கெனவே, 'இதயம் முரளி' நிகழ்ச்சியில் மேடையேறி முதல் முறையாகப் பேசியவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த 'டிராகன்' நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது, “இதுதான் என்னுடைய முதல் மேடை, அதனால் ரொம்ப பதட்டமாக இருக்கிறேன்,” என பேசி அதிர்ச்சி அளித்தார்.
ஆரம்பத்திலேயே நன்றாகப் பொய் பேசும் கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் பிழைத்துக் கொள்வார்.